
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பத்தில், அகில பாரத ஜயப்ப சேவா சங்கம் மற்றும் டைகர் குருசாமி குரூப் சார்பில் 22 ம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
அதையொட்டி, ஐயப்பன் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு, படி அலங்காரம் செய்து, 1,008 அர்ச்சனை, ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடி சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடந்தது. இதில் 700 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
குருசாமிகள் துரைராஜ், சவுந்தர், மாவட்ட நிர்வாகிகள் சுவாமிநாதன், ராஜமாரியப்பன், நகர நிர்வாகிகள் வேல்சாமி, நாகராஜன், ராஜ்குமார், ஸ்ரீராமுலு, சுந்தரராமானுஜம், பழனிச்சாமி, சிவகைலாசம், துரைபாண்டி, செல்வராஜ், கணேஷ்குமார். ஜயப்ப பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்

