sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆரோக்கியமான உணவு முறை தேவை இருதய நிபுணர் கல்யாணராமன் விளக்கம்

/

ஆரோக்கியமான உணவு முறை தேவை இருதய நிபுணர் கல்யாணராமன் விளக்கம்

ஆரோக்கியமான உணவு முறை தேவை இருதய நிபுணர் கல்யாணராமன் விளக்கம்

ஆரோக்கியமான உணவு முறை தேவை இருதய நிபுணர் கல்யாணராமன் விளக்கம்


ADDED : அக் 11, 2024 06:30 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகை பிடிப்பதை தவிர்த்தால் இருதய பிரச்னை குறையும் என, கடலுார் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை டாக்டர் கல்யாணராமன்கூறினார்.

அவர் மேலும், கூறியதாவது:

இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவைஇருதய நோய் ஏற்பட காரணங்களாகும். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளைதவிர்த்து, தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்காத உணவு பழச்சாறுகளை தேர்வுசெய்து ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

சத்து நிறைந்த காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். உப்பு நிறைந்த மற்றும்பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும்உடற்பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் என, வாரத்தில் 5 நாட்கள் செய்யவேண்டும்.

தினசரி பணிகளில் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். புகை பிடிப்பது, புகையிலைபயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலமாக இருதய ஆரோக்கியத்தைமேம்படுத்த முடியும். புகை பிடிப்பதை கைவிட்ட 2 ஆண்டிற்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது. புகை பிடிப்பதை தவிர்ப்பதன் மூலமாக

இருதய பிரச்னைகளை குறைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us