/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 27, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தாய், மகனைத் தாக்கிய 3 மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விருத்தாசலம் அடுத்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி அஞ்சலை, 60; அதேபகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 22ம் தேதி அஞ்சலையின் மகன் பிச்சைபிள்ளையிடம் ஜெயபால், அவரது ஆதரவாளர்கள் ஆண்டாள், செல்வராணி, ஆகியோர் தகராறு செய்து தாக்கினர்.
புகாரின் பேரில், ஜெயபால் உட்பட 3 பேர் மீது கம்மாபுரம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.