/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காசு வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு
/
காசு வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே காசு வைத்து சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, எடச்சித்துார் கிராமத்தில் காசு வைத்து சூதாடிய 6 பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள், அதே பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் வெங்கடேசன், 40, சேட்டு மகன் பன்னீர்செல்வம், 32, வெங்கடேசன் மகன் மணிமாறன், 27, ராமச்சந்திரன் மகன் சந்திரபிரகாஷ், திருவேங்கடம் மகன் கோவிந்தசாமி, ராமச்சந்திரன் மகன் சீனிவாசன் என தெரிந்தது.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.