/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு
/
குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 06, 2024 04:56 AM
கடலுார் : தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடலுார் ஆல்பேட்டை ஜான்பாஷா, 50; வண்ணார பாளையம் பாபு, 37; அரிசிபெரியாங் குப்பம் வசந்தி, 40; விருத்தாசலம் எருமனுார் தங்கதுரை, 50; பூதவராயன்பேட்டை செல்வம், 54; குறிஞ்சிப்பாடி, வேலவிநாயகர்குப்பம் பஞ்சமூர்த்தி, 40; சோழதரம் ராஜசேகர், 54; காட்டுமன்னார்கோவில் வீரநல்லுார் சுக்லா, 40; ஆகிய 8 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
குள்ளஞ்சாவடி, அம்பல வாணன் பேட்டை கஜேந்திரன், 31; கடலுார், மஞ்சக்குப்பம் சம்பத், 65; ஆகியோரின் கடைகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி களால் 'சீல்' வைக்கப்பட்டது.