அன்புமணியை சஸ்பெண்ட் செய்ய குழு: தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் கடிதம்
அன்புமணியை சஸ்பெண்ட் செய்ய குழு: தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் கடிதம்
UPDATED : ஆக 12, 2025 08:32 PM
ADDED : ஆக 12, 2025 05:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : '' அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது. அவரை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது '', என தேர்தல் கமிஷனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
நீட்டிப்பு
பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் முற்றியுள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். கடந்த 9 ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பொதுக்குழுவில் அன்புமணியின் தலைவர் பதவியை மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.