/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல் 13 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 13 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 07, 2025 02:52 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே இருதரப்பு மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பண்ருட்டி அடுத்த ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகாலிங்கம். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரு கோஷ்டியினரும் தாக்கிக் கொண்டனர். இதில் மகாலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முத்துப்பாண்டி,35; அரசன்,65; ராசாத்தி,60; உட்பட 4 பேர் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார், மேகவர்மன், ரஞ்சித் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், கிருஷ்ணமூர்த்தி மகன் நீதிமாறன்,21; என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.