/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 25, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த ரெட்டிபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள், தம்புசாமி,55; தங்கவேல், 54; இருதரப்புக்கும் மாரியம்மன் கோவில் கட்டுவது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இதன் காரணமாக இருதரப்பும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்தவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பும் குறிஞ்சிப்பாடி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார், தங்கவேல், பிரபாகரன், சீதாலட்சுமி, பிருத்விராஜ், அன்பரசன், வடிவேல், முகிலன் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

