/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 26, 2025 05:50 AM
குள்ளஞ்சாவடி : இருதரப்பு மோதல் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி மகன் லட்சுமிகாந்தன்,22; அதே பகுதியை சேர்ந்தவர் குள்ளையன் (எ) முருகவேல்,35; அதே பகுதியில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற லட்சுமிகாந்தன் உறவினர்களிடம் முருகவேல் ஆபாசமாக பேசி தகராறு செய்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த முருகவேல், அரிவாளால் லட்சுமிகாந்தன் தலையில் வெட்டினார். இதில், காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், முருகவேல், பாஸ்கர், ஜீவரத்தினம், லட்சுமிகாந்தன், ராபர்ட், ராஜமூர்த்தி, வினோத், அருண் உட்பட 20 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

