ADDED : ஏப் 07, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : சிக்கன் பகோடா கடை உரிமையாளரை தாக்கிய, வாலிபர்கள் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்தவர் சையது அசாருதீன்,32; சிக்கன் பகோடா கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 31ம் தேதி கடையில் இருந்தபோது, அண்ணா நகரைச் சேர்ந்த தாஜிக், 25; மொபைல் போனை கேட்டார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தாஜிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அண்ணாநகர் வினித், 25; பூதாமூர் முகேஷ், 23, ஆகியோர் சேர்ந்து சையது அசாருதீனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், தாஜிக் உட்பட பேர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

