/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : மே 25, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக, வாலிபரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜிவ்காந்தி, 30; மணிவாசகன், 50. இருவருக்கும் முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த மணிவாசகன், இவரது மகன் மதன், 37; சேட்டு, 46; ஆகியோர் சேர்ந்து ராஜிவ்காந்தியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், மணிவாசகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.