/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 26, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : முன்விரோத தகராறில் தம்பதியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன்கள் யாகூப்கான், ஷாஜகான் ஆகிய இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த யாகூப்பான், மனைவி ரோஜாபானு, மருமகள் நிஷா ஆகியோர் சேர்ந்து ஷாஜகான், இவரது மனைவியை தாக்கினர். இதில், காயமடைந்த இருவரும் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், புவனகிரி போலீசார், யாகூப்கான் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.