/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 20, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : வாலிபரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குள்ளஞ்சாவடி கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் மகன், சாந்தமூர்த்தி, 45. இவருக்கும் சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த, சுப்ரமணியன் என்பவருக்கும் இடையே இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தமூர்த்தி வீட்டின் அருகே இருந்தபோது, அங்கு சென்ற சுப்ரமணியன் உள்ளிட்ட, 4 பேர் அவரை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட சுப்ரமணியன், தெய்வக்கண்ணு, பூபதி, வீரமணி ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.