/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 14, 2025 11:57 PM
குறிஞ்சிப்பாடி, ; தந்தை, மகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராசு மகன், தர்மா, 27; இவர் வீட்டின் அருகில் வசிப்பவர் கோவிந்தசாமி மகன் நடராஜன். தர்மா வீட்டின் நார்த்தங்காய் செடி நடராஜன் வீட்டின் பக்கம் வளர்ந்து இருந்தது.
இது குறித்து இரு தரப்பினரிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. அதில், நடராஜன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தோர், தர்மா மற்றும் செல்வராசுவை கழியால் அடித்து, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த நடராஜன், வைத்தி, உமா, இளவரசன் ஆகிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.