/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 30, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பகுமார், 24; இவர் நேற்று முன்தினம் வயலை உழுது முடித்து டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது முன்விரோதம் காரணமாக அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் உள்ளிட்ட, 4 பேர் அவரை கீழே தள்ளி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த புஷ்பகுமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சாமிதுரை, சிலம்பரசன், கோகுல், தினேஷ் ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.