sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிராக்டர் திருப்பியதில் மோதல் 5 பேர் மீது வழக்கு

/

டிராக்டர் திருப்பியதில் மோதல் 5 பேர் மீது வழக்கு

டிராக்டர் திருப்பியதில் மோதல் 5 பேர் மீது வழக்கு

டிராக்டர் திருப்பியதில் மோதல் 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 02, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: டிராக்டரை திருப்பியதில் ஏற்பட்ட மோதலில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,35; இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் விவசாய வேலை முடித்துவிட்டு, விருத்தாசலம் - ஆலடி சாலையில் டிராக்டரில் வீட்டிற்கு சென்றார்.

அப்போது ரமேஷ் டிராக்டரை திடீரென திருப்பினார். இதில் பின்னால் பைக்கில் வந்த வயலுாரை சேர்ந்த காசிநாதன் மகன் அன்புச்செழியன் என்பவருக்கும், ரமேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ரமேஷ், அன்புச்செழியன் தரப்பினர் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் அன்புச்செழியன், ஆதரவாளர் புதுக்குப்பம் அருண்குமார், விஷ்வா மற்றும் ரமேஷ், ஆதரவாளர் சூர்யா உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us