ADDED : நவ 02, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்,41. இவருக்கு ரேவதி,33, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த செந்தமிழ் கடந்த அக்.,31ம் தேதி வீட்டிற்கு திரும்பினார். அன்று இரவு அவரது மனைவி ரேவதி வீட்டிலிருந்து மாயமானார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

