sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய அரசு சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

/

புதிய அரசு சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

புதிய அரசு சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

புதிய அரசு சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?


ADDED : நவ 02, 2025 04:08 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே, புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம், திறப்பு விழா காணாமல், பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேல்வளையமாதேவி ஊராட்சியில் 2024-25ம் ஆண்டிற்கான நெய்வேலி என்.எல்.சி., நிறுவன பொது சமுக பொறுப்புணர்வு நிதி 6 லட்சம் ரூபாயில், புதிய அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகி உள்ளது. ஆனாலும், இன்னும் இதற்கு திறப்பு விழா நடைபெறவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, தர்மநல்லுார், அம்மன்குப்பம், எறும்பூர் ஆகிய கிராம மக்களின் பயன்பாட்டிற்காக இந்த சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us