/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சகோதரர்களை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
/
சகோதரர்களை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 26, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: சகோதரர்களை தாக்கிய, 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
வடலுார் அடுத்த ராசாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன், 35; நேற்று முன்தினம் இவரது தோட்டத்தில் இருந்த மரக்கிளையை தனது சகோதரர் ராமலிங்கம், 50; என்பருடன் சேர்ந்து வெட்டினார்.
அப்போது இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோகுலக்கண்ணன் மற்றும் ராமலிங்கத்தை, விவேகானந்தன் தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் விவேகானந்தன், வெங்கடேசன், சபரிநாதன் உட்பட 9 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.