/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பை கொட்டும் தகராறு தம்பதி மீது வழக்கு
/
குப்பை கொட்டும் தகராறு தம்பதி மீது வழக்கு
ADDED : செப் 08, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : குப்பை கொட்டுவது தொடர்பான தகராறில், தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
வடலுார் அடுத்த உள்மருவாய் பகுதியை சேர்ந்தவர் தவமணி, 51; இவரது வீட்டின் அருகே வசிப்பவர் செல்வகுமார். இவர், அதே பகுதியில் குப்பை கொட்டி வந்தார். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தவமணி, சுகாதாரத்துறைக்கு புகார் அளித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த செல்வகுமார், இவரது மனைவி சரண்யா ஆகியோர் தவமணியிடம் தகராறு செய்தனர். புகாரின் பேரில், வடலுார் போலீசார், தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.