/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கர்ப்பிணியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
/
கர்ப்பிணியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
ADDED : மே 24, 2025 07:11 AM
நடுவீரப்பட்டு : கர்ப்பிணியை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி சித்ரா,26; 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது வீட்டின் எதிரில் செடி வளர்த்துள்ளார். பொது இடத்தில் எதற்காக செடி வளர்க்கிறீர்கள் என, எதிர் வீட்டில் வசிக்கும் கோவிந்தராஜ், இவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் சித்ராவிடம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த தம்பதியினர், செடிகளை அப்புறப்படுத்தி சித்ராவை தாக்கினர். இதில், காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், கோவிந்தராஜ், கலைச்செல்வி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.