/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கணக்கில் வராத பணம் பறிமுதல் நான்கு பேர் மீது வழக்கு
/
கணக்கில் வராத பணம் பறிமுதல் நான்கு பேர் மீது வழக்கு
கணக்கில் வராத பணம் பறிமுதல் நான்கு பேர் மீது வழக்கு
கணக்கில் வராத பணம் பறிமுதல் நான்கு பேர் மீது வழக்கு
ADDED : அக் 09, 2025 02:29 AM
கடலுார்:கடலுாரில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் குறித்து, நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் பீச்ரோட்டில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுலகத்தில், கடந்த 6ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின் முதல் தளத்திலிருந்து கணக்கில் வராத ஐந்து லட்சத்து 79ஆயிரத்து 960ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக கணக்குகள் செயல் அலுவலர் உஷா, தகவல் மேலாண்மை அலுவலர் வெங்கடேசன் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.