sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயணியிடம் பர்ஸ் அபேஸ் ஈரோடு தம்பதி கைது

/

பயணியிடம் பர்ஸ் அபேஸ் ஈரோடு தம்பதி கைது

பயணியிடம் பர்ஸ் அபேஸ் ஈரோடு தம்பதி கைது

பயணியிடம் பர்ஸ் அபேஸ் ஈரோடு தம்பதி கைது


ADDED : அக் 09, 2025 02:30 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணியிடம் பர்ஸ் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு 9:00 மணியளவில், போதையில் துாங்கிக் கொண்டிருந்த பயணியிடம் பர்ஸ் திருடியதாக, சக பயணிகள் இருவரை பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பிடிபட்டவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த முருங்கதொழுவு சல்லிமேடு பகுதியை சேர்ந்த ராஜி மகன் வடிவேல், 44, இவரது மனைவி மேனகா, 37, என்பது தெரிந்தது. இவர்களிடம், பயணியிடம் 6,500 ரொக்கத்துடன் திருடிய பர்ஸ், 2 அடி நீளத்தில் ஒரு இரும்பு கடப்பாறை, சில்லரை காசுகள் இருந்தன.

இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வடிவேல், மேனகா இருவரையும் கைது செய்தனர். மேலும், சில்லரை காசுகள் அதிகளவு இருந்ததால், ஏதேனும் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டனரா என விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us