ADDED : ஜூலை 27, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; இவர், தனது மனைவி பழனியம்மாள், 29; என்பவருடன் நேற்று முன்தினம் காய்கறி வாங்க குள்ளஞ்சாவடி கடை வீதிக்கு சென்றார். அப்போது இவர்களை குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த கரிகாலன், முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கினார்.
இதில் காயமடைந்த சுரேஷ் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கரிகாலன் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.