/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு
ADDED : அக் 16, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி நடுதெருவை சேர்ந்தவர் அன்புமணி, 21; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர் கடந்த 12ம் தேதி, தனது மாமா பிரகா ைஷ பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் பச்சமுத்து, என்பவர், அன்புமணியை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பச்சமுத்து மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.