/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் மீது தாக்குதல் தாய், மகன் மீது வழக்கு
/
பெண் மீது தாக்குதல் தாய், மகன் மீது வழக்கு
ADDED : ஆக 15, 2025 03:25 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நிலத்தகராறில், பெண்ணை தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி பத்மாவதி, 52. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த செல்வராசு என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், இவர்களுக்குள் கடந்த மாதம் 18ம் தேதி மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த செல்வராசு, தாய் சித்ரா ஆகியோர் சேர்ந்து, பத்மாவதியை அசிங்மாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் செல்வராசு, தாய் சித்ரா மீது வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.