ADDED : பிப் 07, 2026 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மனைவி உமாராணி, 50; மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் உமாராணி வேலை செய்த போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், முன்விரோதம் காரணமாக அவரிடம் தகராறில் ஈடுபட்டார். உமா ராணியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயமடைந்த உமாராணி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சதீஷ் மீது, குறிஞ்சிப்பாடி போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

