/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
/
பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
ADDED : நவ 13, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு திரும்பவரம், நரிக்கரம்பை பகுதியை சேர்ந்த ஈசாக் மகன் பால்ராஜ், 32; இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலையில், பி.எச்.டி., படிக்கும் போது காதலித்துள்ளனர்.
தொடர்ந்து, அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பால்ராஜிடம் கூறியும் அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

