sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறையில் மொபைல் போன் ஆயுள் கைதி மீது வழக்கு பதிவு

/

சிறையில் மொபைல் போன் ஆயுள் கைதி மீது வழக்கு பதிவு

சிறையில் மொபைல் போன் ஆயுள் கைதி மீது வழக்கு பதிவு

சிறையில் மொபைல் போன் ஆயுள் கைதி மீது வழக்கு பதிவு


ADDED : மார் 02, 2024 10:35 PM

Google News

ADDED : மார் 02, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் வைத்திருந்த ஆயுள் கைதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் நார்தடி பாஸ்கர்,37; கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில மாதங்களுக்கு முன் கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இவர், மொபைல்போனை பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, அவரை சிறை காவலர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆயுள் கைதி பாஸ்கர், வௌி சிறை பகுதியில் உள்ள கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்த மொபைல் போனை எடுத்து பேசியபோது, ஜெயிலர் ரவி மற்றும் காவலர்கள் கையும் களவுமாக பிடித்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஜெயிலர் ரவி அளித்த புகாரின் பேரில், ஆயுள் கைதி பாஸ்கர் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us