/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் மாடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
விருதையில் மாடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : ஜன 19, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைசேர்ந்தவர் பழனிவேல், 55. விவசாயி.
இவர் கடந்த மாதம் 21ம் தேதி தனது விவசாய நிலத்தில், 5 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, ஒரு மாட்டை காணவில்லை.
அதேபோல், விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த வினோத்குமார், 35, வழக்கறிஞர். என்பவரது வீட்டின் தொழுவத்தில் கட்டி இருந்த பசுமாட்டையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து, பழனிவேல், வினோத்குமார் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பசுமாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.