ADDED : ஜூன் 01, 2025 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: குமளங்குளம் ஞான முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஞான முத்தாலம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை செடல் திருவிழாவையொட்டி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், ஞான முத்தாலம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை சாகை வார்த்தல் விழாவை தொடர்ந்து, செடல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.