/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் இறந்த கப்பல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ. 1.91 கோடி நஷ்ட ஈடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
/
விபத்தில் இறந்த கப்பல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ. 1.91 கோடி நஷ்ட ஈடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
விபத்தில் இறந்த கப்பல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ. 1.91 கோடி நஷ்ட ஈடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
விபத்தில் இறந்த கப்பல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ. 1.91 கோடி நஷ்ட ஈடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 15, 2025 02:20 AM

கடலுார்: விபத்தில் இறந்த கப்பல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ.1.91 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
கடலுார், முதுநகரைச் சேர்ந்தவர் விமல். கப்பல் அதிகாரி. இவர், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி செல்லங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் தனது சகோதரி தென்றல் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் கடலுார் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்ட ஈடு கேட்டு கடலுார் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்-1ல் மனுத் தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விமல் குடும்பத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 48 ஆயிரம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். இதற்கிடையே, இவ்வழக்கு தொடர்பாக விமல் குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1 கோடி 91 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வட்டி தொகையுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.