sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்

/

சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்

சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்

சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்


ADDED : அக் 01, 2024 06:55 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்காததை கண்டித்து, சிதம்பரம் வேளாண விரிவாக்க மைய அலுவலகத்தை பூட்டி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே கிள்ளை, நஞ்சமகத்து வாழ்க்கை, சி.மானம்பாடி, தில்லைவிடங்கன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2022- 23 பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, உரிய முறையில் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக, சிதம்பரத்தில் புவனகிரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கு விவசாயிகள் நேற்று அழைக்கப்பட்டனர்.

அதன்படி, 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை அலுவலகம் சென்று காத்திருந்துள்ளனர்.

ஆனால், வேளாண் அதிகாரிகள் மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை அலுவலர்களை உள்ளே வைத்து, பூட்டி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததை தொடர்ந்து, அலுவலகம் திறக்கப்பட்டது. தொடர்ந்து வேளாண் அதிகாரிகளும், விவசாயிகள் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us