/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அரசு கல்லுாரி மாணவிகள் வெற்றி
/
சிதம்பரம் அரசு கல்லுாரி மாணவிகள் வெற்றி
ADDED : செப் 02, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கடலுாரில் நடந்த மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
கல்லுாரிகளுக்கு இடையே மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான பூப்பந்துப் போட்டி கடலுாரில் நடந்தது.
இப்போட்டியில் சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி மாணவிகள் வெற்றி பெற்று இரண்டாமிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநர் நாராயணசாமி உடனிருந்தார். மாணவிகள் மேகலாவதி, ஆர்த்தி, சீத்தாலட்சுமி ஆகியோர் மாநில அளவில் பூப்பந்து போட்டிக்கு தேர்வாகினர்.