sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.54 கோடியில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி புனரமைப்பு! 50 படுக்கை கொண்ட அதிதீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம்

/

ரூ.54 கோடியில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி புனரமைப்பு! 50 படுக்கை கொண்ட அதிதீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம்

ரூ.54 கோடியில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி புனரமைப்பு! 50 படுக்கை கொண்ட அதிதீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம்

ரூ.54 கோடியில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி புனரமைப்பு! 50 படுக்கை கொண்ட அதிதீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம்


ADDED : மார் 10, 2025 12:29 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 54 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடலுார் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் உயர்தரமான மருத்துவ வசதிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்யும் விதமாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி 1985ம் ஆண்டு துவங்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனை 1992 ம் ஆண்டு துவங்கப்பட்டது.

தற்போது இம்மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் 1250 படுக்கை வசதிகள் உள்ளன. தினந்தோறும் 1000 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். சராசரியாக 750 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன.

தற்போது மருத்துவக் கல்லுாரியில் 750 மாணவர்களும், பல் மருத்துவக் கல்லுாரியில் 500 மாணவர்களும் பயின்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்கள் உட்பட 101 மருத்துவர்களும், பல் மருத்துவக் கல்லுாரியில் விரிவுரையாளர்கள் உட்பட 58 மருத்துவர்களும், 65 மருந்தாளுனர்களும், 301 செவிலியர்களும், 291 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

சிதம்பரம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆய்வுக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் உள்ள கட்டடங்களை புனரமைத்து புதுப்பித்து கூடுதலான பொதுமக்கள் சிகிச்சைபெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதனடிப்படையில் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 17.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 பணிகளும், அரசு மருத்துவ கல்லுாரியில் 7.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 பணிகளும், அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் 3.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பணிகளும், அரசு செவிலியர் கல்லுாரியில் 3.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பணிகளும், தங்கும் விடுதிகளில் 14.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 பணிகளும், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகங்களில் 9.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 பணிகளும் என மொத்தம் 55.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் பார்வையிட்டார்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பதிவறை, பொது மருந்தகம், தொற்றாநோய் மருந்தகம், காது மூக்கு தொண்டை பிரிவு, அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கழிப்பறை, மனநலப் பிரிவு, தோல் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவமனையால் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் திருப்பதி, சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கவிதா, அருள்ராஜா, உதவிப் பொறியாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us