sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

/

சிதம்பரம் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சிதம்பரம் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சிதம்பரம் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


ADDED : ஏப் 21, 2025 05:29 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சிதம்பரம் சாராய வியாபாரி, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார், கடந்த 2ம் தேதி, ஆணையம்பேட்டை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பனைமரத்தின் கீழே நின்றிருந்த நபர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்த போது, புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் ஐந்து லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கீழ்பூவானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ராதாகிருஷ்ணன்,49, என்பது தெரிந்தது. உடன், போலீசார் அவரை கைது செய்தனர். இவர், மீது சிதம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவில் 5 சாராய வழக்கு உள்ளன.

அவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ராதாகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள ராதாகிருஷ்ணனிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கி கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us