/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் திட்ட நிறைவு விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
முதல்வர் திட்ட நிறைவு விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 25, 2024 11:01 PM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட நிறைவு விழாவில், அமைச்சர் கணேசன் 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட நிறைவு விழா நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், துணை தலைவர் ராணி தண்டபாணி, ஒன்றிய சேர்மன் மலர் முருகன், துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 300 பயனாளிகளுக்கு 18 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விருத்தாசலம் தாலுகாவில் 14 முகாம்கள் நடத்தப்பட்டு, 3,492 மனுக்கள் பெறப்பட்டன.
அதில் 3,072 மனுக்கள் தீர்வு காணப்பட்ட நிலையில், 163 மனுக்கள் பரிசீலனையிலும், 257 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் பாவாடைகோவிந்தசாமி, வேல்முருகன், கனககோவிந்தசாமி, துணை செயலாளர் மணிவேல், வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட தலைவர் ஜெயகுரு, பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தாசில்தார் உதயகுமார் நன்றி கூறினார்.

