/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீர் என நினைத்து டீசல் குடித்த குழந்தை சாவு
/
தண்ணீர் என நினைத்து டீசல் குடித்த குழந்தை சாவு
ADDED : பிப் 06, 2025 11:15 PM
கடலுார்: வடலுார் அருகே தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கடலுார் மாவட்டம், வடலுார் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 29; இவரது மனைவி சினேகா. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 4 பிள்ளைகள் உள்ளன. நான்காவது பெண் குழந்தையான ஒன்றரை வயது மைதிலி நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.
திடீரென அடுப்பு பற்ற வைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை, தண்ணீர் என நினைத்து குழந்தை குடித்தது. இதையறிந்த பெற்றோர், குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிக்சை பலனின்றி இறந்தது.
புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.