/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை பலி
/
தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை பலி
ADDED : செப் 05, 2025 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார், பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவசங்கர். கூட்டுறவு துறை ஊழியர்.
இவரது மனைவி ஞானசவுந்தரி. இவர்களின் பெண் குழந்தைகள் குணஸ்ரீ , 1; குகஸ்ரீ , 1, ஆகிய இருவரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து குணஸ்ரீயை பார்த்த போது, வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குணஸ்ரீ இறந்து விட்டதாக கூறினர்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.