sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 3ல் துவக்கம்

/

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 3ல் துவக்கம்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 3ல் துவக்கம்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 3ல் துவக்கம்


ADDED : மே 01, 2025 05:39 AM

Google News

ADDED : மே 01, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், சித்திரை பிரம்மோற்சவம் வரும் 3ம் தேதி துவங்குகிறது.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 3ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 4.00க்கு மேல் 4.50 மணிக்குள் அங்குரார்ப்பனம், உற்சவர் வீதியுலா நடக்கிறது.

4ம் தேதி காலை 4.56 மணிக்கு த்வஜா ரோகணம், இரவு அம்ச வாகனத்தில்சுவாமி வீதியுலா, 5ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி காலையாளி வாகனம், இரவு அனுமந்த வாகனத்தில் வீதியுலா, 7ம் தேதி காலை வேணு கோபாலன் சேவை, இரவு சேஷ வாகனத்தில்பரமபத நாதன் சேவை நடக்கிறது.

8ம் தேதி காலை தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், இரவு கருட வாகனமகோற்சவம்,9ம் தேதி மாலை மஞ்சள்நீர் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 10ம் தேதிகாலை வெண்ணைத் தாழி உற்சவம், இரவு தெருவடைச்சான் உற்சவம், 11ம் தேதி காலை பேட்டை உற்சவம், இரவு வெள்ளிகுதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.

12ம் தேதி முக்கிய நிகழ்வாக காலை 4.30க்கு மேல் 5.50 மணிக்குள் திருத்தேர்உற்சவம், தீர்த்தவாரி, இரவு பானக பூஜை, அவரோகணம், 13ம் தேதி காலை மட்டையடி, தங்க பல்லக்கில் வீதியுலா, இரவுதெப்ப உற்சவம், புஷ்ப பல்லக்கு, 14ம் தேதி காலை துவாதச ஆராதனம், 16ம் தேதி விடையாற்றி உற்சவம், சாற்று முறைநடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுலர் வெங்கடகிருஷ்ணம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்செய்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us