sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

/

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா


ADDED : ஜூன் 21, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் மார்க்கெட் பணிகள் தரமில்லாமல் உள்ளதாக குற்றம்சாட்டி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் முதுநகரில் உள்ள பழமையான பக்தவச்சலம் மார்க்கெட்டில் இருந்த கடைகள் பழுதடைந்ததால், அவற்றை இடித்துவிட்டு புதிய மார்க்கெட் கட்டும் பணி கடந்த 2023ம் ஆண்டு துவங்கியது. நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 60 லட்சம் ரூநாய் மதிப்பில் மார்க்கெட் கட்டும் பணி நடக்கிறது.

கட்டுமானப் பணிகள் தரமானதாக இல்லை என்றும், ஏற்கனவே அறிவித்தது போல போதிய அளவு கடைகளை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி கவுன்சிலர்கள் அ.தி.மு.க., பரணிதரன், பா.ம.க., சரவணன், வி.சி., கவுன்சிலர் ராஜலட்சுமி கணவர் சங்கரதாஸ் ஆகியோர் நேற்று காலை 10:00 மணிக்கு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us