ADDED : ஜன 06, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : இரும்பு ராடை துாக்கிச் சென்ற கிளீனர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன்,30. போர்வெல் லாரி கிளீனரான இவர், நேற்று முன்தினம் கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் போர்வெல் போட இரும்பு ராடை துாக்கிச் சென்றார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடன் அவரை சக தொழிலாளர்கள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.