ADDED : அக் 27, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே சேவல் சண்டை நடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சத்திரம் சப்.இன்ஸ்பெக்டர் சாந்தா, நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புதுச்சத்திரம் அடுத்த சின்னாண்டிக்குழி முந்திரி தோப்பில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் அருண், நாகராஜ் மகன் ராஜேஷ் இருவரும், அரசு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி சூதாடி யது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் அருண், ராஜேஷ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

