sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநகராட்சியில் நிலுவை வரி பாக்கி வசூல் கெடுபிடி! தேர்தல் வருவதால் தி.மு.க.,வினர் கலக்கம்

/

மாநகராட்சியில் நிலுவை வரி பாக்கி வசூல் கெடுபிடி! தேர்தல் வருவதால் தி.மு.க.,வினர் கலக்கம்

மாநகராட்சியில் நிலுவை வரி பாக்கி வசூல் கெடுபிடி! தேர்தல் வருவதால் தி.மு.க.,வினர் கலக்கம்

மாநகராட்சியில் நிலுவை வரி பாக்கி வசூல் கெடுபிடி! தேர்தல் வருவதால் தி.மு.க.,வினர் கலக்கம்


ADDED : பிப் 14, 2024 03:38 AM

Google News

ADDED : பிப் 14, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : எம்.பி., தேர்தல் வர உள்ள நிலையில், நிலுவை வரி பாக்கியை வசூலிக்க கடலுார் மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது, தி.முக., வினரை கலக்கமடைய செய்துள்ளது.

கடலுார் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் கட்டணங்கள் தீவிர வரி வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்கு, பொதுமக்கள் சொத்துவரி 49.20 சதவீதம் மட்டுமே செலுத்தியுள்ளனர். குடிநீர், பாதாள சாக்கடை, தொழில்வரி, தொழில் உரிமக் கட்டணங்களும் குறைந்த சதவீதமே வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரி பாக்கி ஏற்பட்டு, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் புலம்புகின்றனர்.

கடலுார் நகராட்சியாக இருந்தபோது, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வரி வசூல் செய்யாமலேயே காலத்தை ஓட்டிவிட்டு சென்று விட்டனர்.

தி.மு.க., ஆட்சி மலர்ந்ததும் கடலுார் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், அதற்கேற்ப வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் கடலுார் வரி வசூலில் 19வது இடத்தில் உள்ளது. அதன் காரணமாக, அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் காலையில் வரி வசூலில் ஈடுபட வேண்டும். மதியம் அலுவலக வேலையை கவனிக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊழியர்கள் கெடுபிடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, கடப்பாறையோடு வீட்டின் முன்பு முற்றுகையிட்டு வசூல் செய்கின்றனர்.

பல இடங்களில் நகராட்சி ஊழியர்களை, பொதுமக்கள் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்க்கின்றனர். ஆனால், அதுபற்றி கவலைப்படாமல் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், கடைகளுக்கு பல மடங்கு வாடகை உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி என அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டதன் காரணமாக மாநகராட்சி கடைக்காரர்கள் நேற்று முன்தினம் கமிஷ்னரை முற்றுகையிட்டு தமது குறைகளை எடுத்துக் கூறினர். நிலுவையில் உள்ள வரிகளை தவனைமுறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கடலுார் மாநகராட்சியின் அதிரடி வசூல் நடவடிக்கை, மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, மாநகராட்சி கெடுபிடி வசூல் நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்துமோ என, தி.மு.க., வினர் கலக்கத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us