sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை

/

நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை

நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை

நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை


ADDED : ஜூலை 27, 2025 08:26 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : குழந்தைகள் நீர் நிலைகள் அருகே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் சி பி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் குளிப்பதையும், துணிகள் துவைப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் பெற்றோர் அனுமதியின்றி நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us