sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலெக்டர் குறைகேட்பு கூட்டம் : 994 மனுக்கள் குவிந்தன

/

கலெக்டர் குறைகேட்பு கூட்டம் : 994 மனுக்கள் குவிந்தன

கலெக்டர் குறைகேட்பு கூட்டம் : 994 மனுக்கள் குவிந்தன

கலெக்டர் குறைகேட்பு கூட்டம் : 994 மனுக்கள் குவிந்தன


ADDED : மார் 25, 2025 06:53 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 994 மனுக்கள் வரப்பெற்றன.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் பொதுமக்களிடமிருந்து 994 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 12,000 ரூபாய் மதிப்பில் காலிபர் சாதனங்கள், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற 12 மாணவ, மாணவியகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவதற்காக தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நடமாடும் சேவை ஊர்தியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கூட்டத்தில் டி.ஆர்.டி., ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடேசன், உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us