/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சத்திரத்தில் மா.கம்யூ., மாநாடு
/
புதுச்சத்திரத்தில் மா.கம்யூ., மாநாடு
ADDED : அக் 25, 2024 06:40 AM

புதுச்சத்திரம்: பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய மா.கம்யூ., மாநாடு புதுச்சத்திரத்தில் நடந்தது.
ஒன்றிய செயலர் விஜய் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயலர் மாதவன் முன்னிலை வகித்தனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மீனவ மக்களுக்கு வழங்கிய சுனாமி பட்டாவை நிரந்தர பட்டாவாக மாற்றித் தர வேண்டும். ஒன்றியத்தில் உள்ள பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ், சுடுகாடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் ராஜேஸ்வரி, உதயகுமார், ஜெயசீலன், வேல்முருகன், கொளஞ்சியப்பன், ஹசன் முகமது மன்சூர், தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை செயலர் பரமசிவம் நன்றி கூறினார்.

