பாதசாரிகள் சிரமம் விருத்தாசலம் கடை வீதியில் வாகனங்கள்தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
முத்துக்குமரன், விருத்தாசலம். ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? கடலுார் மஞ்சக்குப்பம் மார்க்கெட் முதல் தபால் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பச்சையப்பன், கடலுார். சென்டர் மீடியன் தேவை கடலுார் புதுச்சேரி சாலையில் தென்பெண்ணையாறு பாலம் முதல் முள்ளோடை வரை விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்ராஜ், கடலுார். சாலைகள் சீரமைக்கப்படுமா? பரங்கிப்பேட்டை ஒன்றியம், சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட முத்தையா நகரில் உள்ள சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சிவசுப்பிரமணியன், முத்தையா நகர். நாய்கள் தொல்லை திட்டக்குடி தாலுகா, கொடிக்களம் கிராமம் தோப்புக்காலனி மாரியம்மன் கோவில் தெருவில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
பாலு, கொடிக்களம். நிழற்குடை ஆக்கிரமிப்பு திட்டக்குடி பஸ் நிலையத்தில், பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட நிழற்குடையைச்சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளதால், நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
செல்வம், திட்டக்குடி.

