ADDED : மார் 02, 2024 05:58 AM

அ நிறம் | அளவு
கடலுார் : அண்ணாகிராமம் ஒன்றியம் தட்டாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் தினகரனுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சசிகலா முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் கோபிநாதன், மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் சிவக்குமார், நடராஜன், பிரபாகரன் சிறப்புரையாற்றினர். பட்டதாரி ஆசிரியர் தினகரன் ஏற்புரையாற்றினார்.
பட்டதாரி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.
