ADDED : ஏப் 02, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டருக்கு, ஓய்வு பெறுவதையொட்டி பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
ஒரத்துார் ஜெயச்சந்திரன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஒரத்துார் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெறும் இளங்கோவனின் பணியை பாராட்டினர்.
பணிநிறை பெற்ற இளங்கோவனை டி.எஸ்.பி., விஜிகுமார் தனது வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

